திங்கள், 25 நவம்பர், 2013

சிலம்பம் 
 "சிலம்பம் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது.
"சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு.
எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.
சிலம்பம், தமிழர்களின் வீரவிளையாட்டு. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழர் தோற்றம் பற்றி 4 கருதுகோள்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருதுகோள். பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். மூன்றாவது கருதுகோள் ஆதியில் ஆபிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாக தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே தமிழர் என்கிறது [14]. தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்று.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஆதிச்ச நல்லூரில், அகழ்ந்தெடுக்கப்பட்ட கிமு 1000-ஆம் ஆண்டு காலத்து புதையுண்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கிமு 500-ஆம்ஆண்டைச் சேர்ந்தவையாகும் [15]. இதையும் சங்கத்தமிழ் இலக்கிய ஆதாரங்களையும் கொண்டு குமரிக்கண்டத்தில் இருந்து தமிழர் வந்தார்கள் என்று சிலர் கூறுவர்.
தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளும், தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டுள்ள நாடுகளும் பட்டியலிடப்படுகின்றன.
சோழர் ஆட்சிக்காலத்தில் பரவியிருந்த தமிழ்
உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. பேசுபவர்களின் எண்ணிக்கையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்திராவிமொழியிலிருந்தே தெலுங்குகன்னடம்மலையாளம் ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர். உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவரும்,தமிழ்நாட்டில்தமிழீழத்தில் தமிழரோடு வாழ்ந்து தமிழில் பேசி, தமிழ்ப் பண்பாட்டை கடைபிடிப்பவரும் தமிழர் ஆவர். பழங்காலத்தில் சீனாஎகிப்துகம்போடியாஇந்தோனேசியாதாய்லாந்து ஆகிய நாடுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.[1] பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழர்களை ஆசியாவின் பிற பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவிற்கும் அழைத்துச் சென்றனர். மலேசியாவில் மட்டும் பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்.

ஆட்சிமொழி

நாடுகள்

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள் (சட்டத்தின்படி)
நாடுபகுதிமக்கள்[1]
சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர்[2]ஆசியா5,312,400
இலங்கையின் கொடி இலங்கை ஆசியா20,277,597

நாட்டின் பகுதிகள்

எண்பகுதிகண்டம்மக்கள்தொகைநிலை
இந்தியாவின் கொடி அந்தமான் நிக்கோபார் தீவுகள்ஆசியா379ஒன்றியப்
பிரதேசம்
இந்தியாவின் கொடி பாண்டிச்சேரிஆசியா1ஒன்றியப் பிரதேசம்
இந்தியாவின் கொடி தமிழ்நாடுஆசியா72மாநிலம்

அங்கீகரிக்கப்படாத பகுதிகள்

நாடு ! width=500px | குறிப்பு
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி தமிழீழம்(தமிழீழம்)இலங்கையின் வடக்கு, வடகிழக்கு மாகாணங்கள்
தமிழீழத்தின் பகுதிகளாகக் கோரப்பட்டுள்ளன.
இந்தியாவின் கொடி காரைக்கால்தனி ஒன்றியப் பிரதேசமாகக் கோருகிறது.

பண்பாட்டு மொழி

மேற்கூறிய நாடுகள் தவிர சில நாடுகளில் தமிழ் ஒரு பண்பாட்டு மொழியாக வாழ்கிறது.
மொரீசியசு நாட்டுப் பணத்தில் தமிழ் எழுத்துகள் (இன்றும் உள்ளன)
நாடுபகுதி
மலேசியா கொடி மலேசியா[4]ஆசியா
மொரீஷியஸின் கொடி மொரீஷியஸ்[5]ஆபிரிக்கா
பிரான்சின் கொடி இறீயூனியன் [6]ஆப்பிரிக்கா
Flag of the Seychelles சிஷெல்ஸ்[7]ஆப்பிரிக்கா
இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்குமாறு கோரப்பட்டுள்ளது.[8]

புதன், 20 நவம்பர், 2013

~முதல் கப்பல் படை~ 
உலகில் முதல் கப்பலும் கப்பல்படையும் தமிழருடையதேஉலகில் கப்பல் கண்டுபிடித்தவன்தமிழன்.உலகின் கப்பல்கட்டுமானத்தில்சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள்எனப்பட்டனர்.கடலில்பயணம்செய்வது எப்படிகாற்று எந்தநாட்களில் எப்படி வீசும்?காற்றின்திசைகளைகொண்டு பயணம்செய்வது எப்படி என்று கடல்சார்ந்த அத்தனை அறிவுகளிலும்மேம்பட்டு விளங்கியவன்தமிழன்.உலகில் முதல் கப்பலும்கப்பல் படையும்தமிழருடையதே.உலகின் முதல்கப்பலையும் கப்பல் படையும்வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன் மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காக வருடா வருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகிய காலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில்பாடும் நீரோட்டத்தின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ. தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மை தெரிந்தது..இப்படி பயணம் செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன் பின்தொடர்ந்த போது உலகின் பலநாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள்சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழினக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.உதாரணம்:தமிழா-மியான்மர்.சபா சந்தகன்-மலேசியா ஊழன்,சோழவன்,வானங்கரை,ஒட்டன்கரை,ஊரு-ஆஸ்திரேலியா கடாலன்-ஸ்பெயின் நான்மாடல் குமரி-பசிபிக் கடல் சோழா,தமிழி,பாஸ்-மெக்ஸிகோ திங் வெளிர்-ஐஸ்லாந்துகோமுட்டி-ஆப்பிரிக்கா.இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்து அதன் மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.இதே போல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலைஆராய்ந்துபார்த்ததில்அது 2500வருடங்களுக்கம் மேல்பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும் தெரிவித்தனர்.நியூசிலாந்தில் தமிழ்எழுத்து பொறிக்கப்பட்டமணி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இன்னும்உலகில் உள்ள கப்பல்மற்றும்,கடல் சார்ந்ததுறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன